நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உறுதி செய்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு காஷ்மீர் என்ற மாகாணம் எந்த நாட்டுடனும் சேராமல் இருந்தது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த காஷ்மீர் மாகாணத்தை மஹாராஜா ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார்.
காஷ்மீர் மாகாணம் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதை அந்த மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்ற உரிமை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீரை அபகரிக்க பாகிஸ்தான் முயன்ற போது இந்தியாவிடம் பாதுகாப்புக் கோரிய மஹாராஜா ஹரிசிங், அதற்காக பல நிபந்தனைகளை விதித்தார்.
அவரது நிபந்தனைகளின் அடிப்படையில்தான் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்து காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை இழக்கும் வேலையை மத்திய அரசு தற்போது செய்துள்ளது.
காஷ்மீரத்து மக்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் அந்த மக்களுக்கு ஆதரவையும் சலுகைகளையும் வழங்கி அவர்களிடம் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் மனப்பூர்வமான சம்மதத்துடன் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டிய முயற்சிகளை விடுத்து காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளைக் குவித்து அவர்களை மிரட்டி அவர்களுக்குள்ள உரிமைகளை ரத்து செய்தால் அந்த மக்கள் எப்படி இனங்கி வருவார்கள்?
பொதுவாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்களின் எண்ணத்தைக் கேட்க வேண்டும் என்ற வழக்கு ஐநாவில் உள்ளதே! அதற்கு மாற்றமாக அமைந்துள்ளது மத்திய அரசின் இந்த செயல்பாடு.
அதுமட்டுமின்றி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற கருத்தில் உள்ள கோடிக்கணக்கான காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மத்திய அரசின் இந்த செயல் நீர்த்துப் போகச்செய்துள்ளது.
காஷ்மீரில் திடீர் பரபரப்பையும் பதட்டத்தை ஏற்படுத்தி தனி அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்யும் முடிவை அறிவித்துள்ள மத்திய அரசின் இந்தச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
காஷ்மீரின் சிறப்பு அந்தந்தஸ்து சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
இப்படிக்கு...
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக: அப்துல் ரசாக்
இந்தியா சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு காஷ்மீர் என்ற மாகாணம் எந்த நாட்டுடனும் சேராமல் இருந்தது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த காஷ்மீர் மாகாணத்தை மஹாராஜா ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார்.
காஷ்மீர் மாகாணம் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதை அந்த மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்ற உரிமை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீரை அபகரிக்க பாகிஸ்தான் முயன்ற போது இந்தியாவிடம் பாதுகாப்புக் கோரிய மஹாராஜா ஹரிசிங், அதற்காக பல நிபந்தனைகளை விதித்தார்.
அவரது நிபந்தனைகளின் அடிப்படையில்தான் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்து காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை இழக்கும் வேலையை மத்திய அரசு தற்போது செய்துள்ளது.
காஷ்மீரத்து மக்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் அந்த மக்களுக்கு ஆதரவையும் சலுகைகளையும் வழங்கி அவர்களிடம் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் மனப்பூர்வமான சம்மதத்துடன் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டிய முயற்சிகளை விடுத்து காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளைக் குவித்து அவர்களை மிரட்டி அவர்களுக்குள்ள உரிமைகளை ரத்து செய்தால் அந்த மக்கள் எப்படி இனங்கி வருவார்கள்?
பொதுவாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்களின் எண்ணத்தைக் கேட்க வேண்டும் என்ற வழக்கு ஐநாவில் உள்ளதே! அதற்கு மாற்றமாக அமைந்துள்ளது மத்திய அரசின் இந்த செயல்பாடு.
அதுமட்டுமின்றி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற கருத்தில் உள்ள கோடிக்கணக்கான காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மத்திய அரசின் இந்த செயல் நீர்த்துப் போகச்செய்துள்ளது.
காஷ்மீரில் திடீர் பரபரப்பையும் பதட்டத்தை ஏற்படுத்தி தனி அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்யும் முடிவை அறிவித்துள்ள மத்திய அரசின் இந்தச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
காஷ்மீரின் சிறப்பு அந்தந்தஸ்து சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
இப்படிக்கு...
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக: அப்துல் ரசாக்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.