புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி 147 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முனிவேல் (வயது 55) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த முனிவேல் மகன் ஸ்டீபன் ராஜ் (31), புஷ்பராஜ் மகன் மணிகண்டன் (28), குமார் (42) ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது விசைப்படகையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி பறிமுதல் செய்தனர்.
பின்னர் மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 4 மீனவர்களையும் நேற்று வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த ஊர்க்காவல்படை நீதிமன்ற நீதிபதி யூட்சன் 4 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தர விட்டார்.
விசைப்படகினை பெறுவதற்கு அனைத்து ஆவணங் களுடன் விசைப்படகின் உரிமையாளர் அக்டோபர் மாதம் 9-ந் தேதி ஆஜர் ஆக வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் படகு அரசுடமையாக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இதனால் விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட தகவல் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவ மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முனிவேல் (வயது 55) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த முனிவேல் மகன் ஸ்டீபன் ராஜ் (31), புஷ்பராஜ் மகன் மணிகண்டன் (28), குமார் (42) ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது விசைப்படகையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி பறிமுதல் செய்தனர்.
பின்னர் மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 4 மீனவர்களையும் நேற்று வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த ஊர்க்காவல்படை நீதிமன்ற நீதிபதி யூட்சன் 4 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தர விட்டார்.
விசைப்படகினை பெறுவதற்கு அனைத்து ஆவணங் களுடன் விசைப்படகின் உரிமையாளர் அக்டோபர் மாதம் 9-ந் தேதி ஆஜர் ஆக வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் படகு அரசுடமையாக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இதனால் விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட தகவல் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவ மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.