புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் கல்யாணராமன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று முதல் தினந்தோறும் கல்யாண ராமன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது.
இதனை தொடர்ந்து 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கல்யாணராமன் சுவாமிக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையாக வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கல்யாணராமன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கால்யாணராமன் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.
இதைதொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் ஒவ்வொரு வீதியிலும் குவிந்து நின்று தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து சுவாமியை வழிப்பட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மீமிசல் மற்றும் சத்திரப்பட்டினம் கிராமமக்கள் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கல்யாணராமன் சுவாமிக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையாக வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கல்யாணராமன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கால்யாணராமன் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.
இதைதொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் ஒவ்வொரு வீதியிலும் குவிந்து நின்று தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து சுவாமியை வழிப்பட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மீமிசல் மற்றும் சத்திரப்பட்டினம் கிராமமக்கள் செய்திருந்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.