புதுக்கோட்டை மாவட்டத்தில் ITI-யில் சேர 3-ஆம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்!!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மூன்றாம் கட்ட மாவட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2019 சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில் கீழ்கண்டவாறு காலியிடங்கள் உள்ளன. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் புதுக்கோட்டையில் 3 இடங்கள், விராலிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 12 இடங்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் 210 காலியிடங்களும் உள்ளன.

அக்காலியிடங்களுக்கான மூன்றாம் கட்ட மாவட்ட கலந்தாய்வு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 02.08.2019 முதல் 20.08.2019 வரை இணையதளம் http://skilltraining.tn.gov.in/DET/ மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Online மூலம் விண்ணப்பத்திலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 20.08.2019 க்குப் பின்னர் கைபேசி வாயிலாக குறுந்தகவல் (கலந்தாய்வு தேதி) தெரிவிக்கப்படும். கலந்தாய்வு அன்று அசல் மற்றும் நகலுடன் அனைத்து சான்றிதழ்களுடன் கலந்தாய்வு மையத்திற்கு நேரில் வந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் அவர்களை நேரிலோ அல்லது 04322 -221584 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments