புதுகை நகரில் நாளை 21.09.2019 மின் தடை அறிவிப்பு



புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை 21.09.2019 சனிக்கிழமை  நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளர் விஜயமூர்த்தி அறிவித்துள்ளார்.
இதனால் மின் விநியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள் சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ் நகர், கீழராஜ வீதி, நிஜாம் குடியிருப்பு, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், கலீப்நகர், மருப்பணிரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர்.


Post a Comment

0 Comments