எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 232 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த முகைதீன் ராவுத்தர் என்பவரின் மகன் ஹபீப் ரகுமான் (வயது 51) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே ஊரை சேர்ந்த கிருஸ்டின் மகன் ஜெரோம் (24), பிரஸ்லின் மகன் மேக்ஸன் (29), மலைசாமி மகன் ரவி (19), சந்தியாகு மகன் கேம்லஸ் (56) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களது விசைப்படகை கயிறு மூலம் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் ராணுவ முகாமில் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் கோட்டைப்பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments