கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற மீலாது நபி விழா



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் 11.11.2019 திங்கள்கிழமை அன்று மாலை மகரிப் தொழுகைக்கு பிறகு  கோபாலப்பட்டிணம் மக்கா தெரு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் சார்பில் மீலாதுநபி விழா நடைபெற்றது.
 இந்த நிகழ்வில் கோபாலபட்டிணம் ஜமாத் தலைவர், நிர்வாகிகள், ஜமாத்தார்கள் தலைமை ஏற்றனர். கோபாலபட்டிணம் அவ்லியாநகர் பள்ளிவாசல்,  இமாம் மௌலானா மௌலவி J.உஸ்மான் அலி நாஃபியி அவர்கள் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார்கள்.

கோபாலபட்டிணம்  தலைமை இமாம், பெரிய பள்ளிவாசல், மௌலவி ஹாபிழ் பாஜில் S.S.ஹாஜா ரஜபுத்தீன் ஆலிம் மன்பயி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சென்னை பாலவாக்கம்,  இமாம் ஜும்ஆ பள்ளிவாசல், மௌலவி, ஹாபிழ் அல்ஹாஜ், இளம் சொல்லருவி A.U.முஹம்மது அபூபக்கர் உஸ்மானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு பேருரை நிகழ்த்தினார்.

இறுதி நிலகழ்வாக கோபாலபட்டிணம் காட்டுபள்ளிவாசல் (மஸ்ஜிதுல் ஹசன்) இமாம் மௌலவி ஹாபிழ் M.S.கலீலுர் ரஹ்மான் ஸிராஜி அவர்கள் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்கள்.

இந்த நிகழ்வில் பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சகோதர சகோதரிகள், பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் என  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல் :  மௌலானா மௌலவி
J.உஸ்மான் அலி நாஃபியி





கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments