தொல்லியல் ஆராய்ச்சி பயிற்சி பெற விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்..!!



தமிழக அரசின் தொல்லியல் துறை சென்னை, தர்மபுரி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலியில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐந்து நாட்கள் பயிற்சி பட்டறை நடத்த திட்டமிட்டுள்ளது.

இப்பயிற்சியில் தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டு, நாணயவியல், வரலாற்று சின்னங்கள் புனரமைப்பு, ஆவணப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்ற தலைப்புகளில், தொல்லியல் அறிஞர்கள் பயிற்சி அளிப்பர்; கள ஆய்வு பயிற்சியும் அளிக்கப்படும்.

விருப்பம் உள்ள, தொல்லியல் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தங்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி ஆகிய விபரங்கள் அடங்கிய பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ் கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.

கமிஷனர், தொல்லியல் துறை
தமிழ் வளர்ச்சி வளாகம்,
தமிழ் சாலை,
எழும்பூர்,
சென்னை - 8

அல்லது நீங்கள் ஆன்லைனிலும்  விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfoXH0PphIDp1UdUML7FpFY_cYj71KXIVFGJKqXqER5ZFO5KQ/viewform?vc=0&c=0&w=1

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு https://www.tnarch.gov.in/ta

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.11.2019

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments