அயோத்தி பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நீதியாக அமைய வில்லை.
அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று 18.11.2019 திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் சம்சுல் லுஹா கண்டன உரை ஆற்றினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது நீதியாக அமைய வில்லை என்பதை உணர்த்தும் வகையில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பின் மாநில செயலாளர் இ.முகம்மது கூறுகையில்..
பாபர் மசூதி இருந்த நிலத்தில், இராமர் கோயில் கட்டுவதற்காக அனுமதி அளித்துள்ளதுடன் பாபர் மசூதி இடத்துக்கு பதிலாக வேறு இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் தங்களுக்கு 5 ஏக்கர் நிலம் வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தை நாடவில்லை.
நீதியைக் கேட்டுத்தான் உச்சநீதிமன்றத்தை நாடினார்கள்..
உச்சநீதி மன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு நீதிக்கு புறம்பானது என்பதை முன்னாள் நீதிபதிகளான கங்குலி, மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்களே சுட்டிக் காட்டி கண்டித்து உள்ளனர்.
இந்த தீர்ப்பு அநீதியானது நியாயமற்றது என்பதை நாட்டில் உள்ள அனைத்து சமுதாயத்தின் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்து நீதியை வழங்க வேண்டும்! தெரிவித்தார்.
பெண்கள், குழந்தைகள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
காவல்துறை அனுமதி இன்றி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இத்தனை ஆயிரம்பேர் திரண்டிருந்தப் போதிலும், சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கோ, போக்குவரத்துக்கோ எத்தகைய பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் கட்டுப்பாடுடன், இராணுவ ஒழுங்குடன் நடந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் தொண்டர்களை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை கைவிட்டதுடன்,
தடைமீறிய கண்டன ஆர்ப்பாட்டம், அதுவும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு ஆர்ப்பாட்டம் அதில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தும்கூட,
மிக கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினரை , மூத்த பத்திரிகையாளர்கள், காவல்துறை – உளவுத்துறை அதிகாரிகள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று 18.11.2019 திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் சம்சுல் லுஹா கண்டன உரை ஆற்றினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது நீதியாக அமைய வில்லை என்பதை உணர்த்தும் வகையில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பின் மாநில செயலாளர் இ.முகம்மது கூறுகையில்..
பாபர் மசூதி இருந்த நிலத்தில், இராமர் கோயில் கட்டுவதற்காக அனுமதி அளித்துள்ளதுடன் பாபர் மசூதி இடத்துக்கு பதிலாக வேறு இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் தங்களுக்கு 5 ஏக்கர் நிலம் வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தை நாடவில்லை.
நீதியைக் கேட்டுத்தான் உச்சநீதிமன்றத்தை நாடினார்கள்..
உச்சநீதி மன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு நீதிக்கு புறம்பானது என்பதை முன்னாள் நீதிபதிகளான கங்குலி, மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்களே சுட்டிக் காட்டி கண்டித்து உள்ளனர்.
இந்த தீர்ப்பு அநீதியானது நியாயமற்றது என்பதை நாட்டில் உள்ள அனைத்து சமுதாயத்தின் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்து நீதியை வழங்க வேண்டும்! தெரிவித்தார்.
பெண்கள், குழந்தைகள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
காவல்துறை அனுமதி இன்றி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இத்தனை ஆயிரம்பேர் திரண்டிருந்தப் போதிலும், சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கோ, போக்குவரத்துக்கோ எத்தகைய பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் கட்டுப்பாடுடன், இராணுவ ஒழுங்குடன் நடந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் தொண்டர்களை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை கைவிட்டதுடன்,
தடைமீறிய கண்டன ஆர்ப்பாட்டம், அதுவும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு ஆர்ப்பாட்டம் அதில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தும்கூட,
மிக கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினரை , மூத்த பத்திரிகையாளர்கள், காவல்துறை – உளவுத்துறை அதிகாரிகள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.