கத்தார்- இந்திய கடற்படைகள் பயிற்சி தோகாவில் துவங்கியது



இந்தியா, கத்தார் கடற்படை பயிற்சி தோகாவில் துவங்கியது.

இதன் மூலம் தகவல் பரிமாற்றம், கடற்பகுதியில் ஏற்படும் பிரச்னைகளை ஒற்றுமையுடன் கையாள்வது போன்றவை மேம்படும்.

ஐ.ஓ.என்.எஸ். எனும் இந்தியப் பெருங்கடல் கடற்படைகளின் தன்னார்வ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் இந்தியா, கத்தார் உட்பட 35 நாடுகள் உள்ளன. பிரச்னைகளின் போது தகவல் பரிமாற்றம், நாடுகள் இணைந்து சவால்களை கையாள்வது போன்றவற்றில் இந்நாடுகள் ஈடுபடும்.

இந்தியா-கத்தார் நாடுகளின் கூட்டுப் பயிற்சி முகாம் கத்தாரில் நவ. 17 ல் துவங்கி 21 வரை நடக்கிறது. இதில் இந்திய கடற்படை மற்றும் கத்தாரி எமிரி கடற்படை வீரர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதற்காக ஐ.என்.எஸ். டிரிகண்ட் கப்பல், பி 8-1 விமானம் இந்தியாவில் இருந்து தோகா சென்றன.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments