மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கல் நிகழ்ச்சி



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்ச்சி 05.11.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு , பள்ளியின் தாளாளர் முகம்மது யூசுப் அவர்கள் தலைமை  ஏற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்கள்.

டாக்டர் S. ராமசந்திரன் துரை , வட்டார மருத்துவ அலுவலர், A. ஜான் பீட்டர் சிறப்பு நிலை மருந்து ஆளுநர், காளிமுத்து சுகாதார ஆய்வாளா் இவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் கொடுத்த பிறகு மாணவர்களுக்கு கசப்பு தெரியாமல் இருக்க இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாப்புலர் மெட்ரிக் நிர்வாகம் சார்பில் வீட்டில் உள்ள அனைவரும் அருந்துவதற்காக மாணவர்களின் குடிநீர் பாட்டலில் நிரப்பி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.












தகவல்: வாசிம் கான்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments