உள்ளாட்சி தேர்தல் 2019: எந்தெந்த பதவிக்கு எந்த நிறத்தில் வாக்குச்சீட்டு?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!!




கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.


கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும்.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நான்கு வகையான பதவியிடங்களுக்கு ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருப்பதால் அவற்றை வேறுபடுத்திக் காட்ட வெவ்வேறு நிறங்களில் வாக்குச்சீட்டிகள் தயாராகி உள்ளன. 

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு வெள்ளை நிறத்திலும், 



கிராம ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், 


ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு பச்சை நிறுத்திலும், 


மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு மஞ்சள் நிறத்திலும்,


இரண்டு கிராம ஊராட்சி வாா்டுகளுக்கு பொதுவாக ஒரே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டால், 

ஒரு வாா்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வாா்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments