எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் இரவு நேரங்களில் அந்த வங்கியின் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது ஓ.டி.பி. எண்ணைக் குறிப்பிட்டால்தான் பணம் எடுக்க முடியும்.
இந்த புதிய முறை வரும் 2020- ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக எஸ்பிஐ வங்கி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது
வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் கூடுதல் பாதுகாப்புடன் பணம் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் வங்கிக்கணக்குடன் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும் அதைக் குறிப்பிட்டபின்தான் பணம் எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிவங்கி இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவு செய்து இருப்பதாவது:
எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதாக இருந்தால் ஒ.டி.பி. குறிப்பிட வேண்டியது அவசியமாகும். அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடி பரிவர்த்தனைகளைக் குறைக்கும் நோக்கில் ஒ.டி.பி. அடிப்படையில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி முதல் இந்த வசதி நடைமுறைக்கு வருகிறது.
இரவு 8 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரையிலான 12 மணி நேரத்தில், ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் அதன் வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதாக இருந்தால், அவர்கள் வங்கிக்கணக்குடன் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும்.
அந்த எண்ணை ஏடிஎம் திரையில் ஓ.டி.பி. எண்ணை அதில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகுதான் ஏ.டி.எம். எந்திரத்திலிருந்து பணம் வரும்.
அதேசமயம் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் போது இந்த வசதி பொருந்தாது. அதாவது எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் உள்ள ஓ.டி.பி. அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதி மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருக்காது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.