அறந்தாங்கி நகரில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்



அறந்தாங்கி நகரில் தடை செய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி சுகாதாரப்பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

அறந்தாங்கி நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து நகராட்சி நிர்வாகம் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறது. அதன்படி நேற்று அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பொறுப்பு முத்துகணேஷ் உத்தரவின்பேரில், நகராட்சி துப்புறவு ஆய்வாளர் சேகர் தலைமையில், பேருந்துநிலையம், பேருந்து நிலையம் பின்புறம், பட்டுக்கோட்டை சாலை ஆகிய பகுதிகளில் நகராட்சி சுகாதாரப் பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது பயன்படுத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டிற்கு வைத்திருந்த கடைக்காரர்களிடம் ரூ.3ஆயிரத்து 50 அபராதம் விதிக்கப்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments