செல்போன் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் விரைவில் அறிமுகம்- சென்னை மெட்ரோ




சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செல்போன்கள் மூலம் டிக்கெட் எடுக்க வருகிற ஜனவரியில் புதிய செயலி வெளியிடுகிறது. இது தவிர QR-கோடு முறையும் அமல்படுத்தப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை செய்து வருகிறது. இதனால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பயணிகளின் வசதிக்காக செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய முறையை விரைவில் அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. நேரடியாக பணம் செலுத்த வேண்டாம்.

செல்போன்கள் மூலம் டிக்கெட் எடுக்க புதிய செயலி

செல்போன்கள் மூலம் டிக்கெட் எடுக்க வருகிற ஜனவரியில் சென்னை மெட்ரோ ரெயில் புதிய ‘ஆப்’ (செயலி) வெளியிடுகிறது. அதை செல்போனில் (ஸ்மார்ட் போனில்) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் பணத்தை ‘ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ரெயில் பயணத்தின்போது பிளாட்பாரத்தின் நுழைவு வாயிலுக்கு முன்பு தானியங்கி கட்டண வசூலிப்பு மையத்தில் செல்போன் மூலம் செலுத்திவிட்டு செல்லலாம்.

இது தவிர ‘கியூஆர்-கோடு முறையும் அமல்படுத்தப்பட உள்ளது. இ-டிக்கெட்டை அடிப்படையாக கொண்டது. இன்னும் 6 மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

‘கியூஆர்-கோடு இ-டிக்கெட்டை ‘ஆப்’ மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெறலாம். இவற்றின் மூலம் வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் பெறுவது தவிர்க்கப்படும்.

டிக்கெட் கவுண்டரில் பணம் மற்றும் கணக்குகளை கையாள்வதில் மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும். இந்த முறை மும்பையில் 10 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், டெல்லி மெட்ரோ மற்றும் விமான நிலையத்திலும் நடைமுறையில் உள்ளது. ஐதராபாத் மெட்ரோ ரெயில் நிலையம் சமீபத்தில் தான் கியூஆர்-கோடு டிக்கெட் முறையை அமல்படுத்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments