கோபாலப்பட்டிணத்தில் தென்பட்ட சூரிய கிரகணம்..! TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக நடைபெற்ற கிரகணத் தொழுகை..!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் (26.12.2019) வியாழக்கிழமை காலை சூரிய கிரகணம் தென்பட்டது.


வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்ற தொடங்கியது. 30 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றியுள்ளது.


இன்று நிகழுந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.07 மணிக்கு தொடங்கி 11.14-க்கு முடிந்தது.

இந்த கிரகணம் கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு என 9 மாவட்டங்களில் தெளிவாக தெரியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதனையடுத்து, கோபாலபட்டிணத்தில் நேற்று காலை சூரிய கிரகணம் வானில் தென்பட்டபோது சூரிய ஒளி மங்கி, மாலை நேரம் போல் காட்சி அளித்தது.

ஏராளமானோர் புகைப்படங்கள் & வீடியோ எடுத்து சூரிய கிரகணம் பார்த்தனர்.

கிராகனத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளை சார்பாக  (26/12/2019) வியாழக்கிழமை கிரகணம் தென்பட்டதால் நபிவழி அடிப்படையில் கிரகண தொழுகை நடைபெற்றது.


அதை தொடர்ந்து கிரகண தொழுகை பற்றிய சிறப்பு பயான் நடைபெற்றது...

இதில் கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

எந்த மனிதனின் இறப்புக்காகவும் சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் எழுந்து,தொழுங்கள்.

(புகாரி 1041, முஸ்லிம் 1670)

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments