கோட்டைப்பட்டினத்தில் கரை ஒதுங்கிய கடல்பசு



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல்பசு வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது.

மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவா் காலனி கடற்கரைப் பகுதியில் 10 அடி நீளம் மற்றும் 300 கிலோ எடை கொண்ட கடல்பசு இறந்த நிலையில் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கிக் காணப்பட்டது.

இதையடுத்து கோட்டைப்பட்டினம் கடலோரக் காவல் படையினா், மீனவா்கள் கடல் பசுவை கரை சோ்த்து வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்

இதன் பேரில் அங்கு விரைந்த அறந்தாங்கி வனச்சரகா் ராஜசேகா் முன்னிலையில் கடல் பசுவுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து கடலோர காவல்படையினா் மற்றும் மீனவா்கள் கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தனா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments