கோட்டைப்பட்டிணத்தில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.!



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா,  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோட்டைப்பட்டிணத்தில் CAA, NRC, NPR போன்ற குடியுரிமையை பறிக்க நினைக்கும் கருப்பு சட்டங்களுக்கு எதிராக SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் வருகிற ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில்,(ECR பள்ளிவாசல் அருகில்) பஸ் திரும்பும் இடத்தில்  நடைபெற உள்ளது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் B. அப்துல் ஹமீது அவர்கள் , மாநில பொதுச்செயலாளர், SDPI கட்சி, இமாம் ஹஸ்ஸான் பைஜி அவர்கள் மாநில பேச்சாளர், SDPI கட்சி, மௌலவி ஹாபிழ் காரி P. நைனா முகம்மது அவர்கள், ஃபாஜில் யூசுப்பியா ஆகியோர்கள் கண்டன உரையாற்ற உள்ளார்கள். 

ஆதாரம் தர மறுப்போம்!
அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்!!

குடும்பம் குடும்பமாக ஆர்ப்பரித்து கலந்து கொள்ளும்படி அழைக்கிறார்கள் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI), கோட்டைப்பட்டினம் கிளை. புதுக்கோட்டை ( கிழக்கு) மாவட்டம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments