அறந்தாங்கி அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்து 15 குழந்தைகள் காயம்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த சீனமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனத்தின் மீது லாரி மோதியதில் பெரியவர் உட்பட 15 குழந்தைகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
சீனமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி திருவள்ளுவர் நர்சரி பிரைமரி பள்ளி வாகனத்தின் மீது கட்டுமாவடி நோக்கி சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15 குழந்தைகள் உட்பட சீனமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவரும் காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



காயமடைந்தவர்களில் குணாளன்(9), மகேஸ்வரன்(10) ஆகிய இரு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில்  கருப்பையா(65) என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  

இந்த விபத்து குறித்து அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி வாகனத்தின் மீது மோதிய லாரி ஓட்டுநர் ஆனந்த் கைது செய்யப்பட்டு நாகுடி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments