2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணி குறித்து தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில், ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளது.
அதில், மக்கள் தொகை கணக்கெடுப்புபணி முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுப்பதும், இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை எண்ணிக்கையை கணக்கெடுப்பும் நடைபெறுகிறது. அதில், முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கான விவரங்களை தமிழக அரசு, அரசிதழில் வெளியீட்டுள்ளது. அதில், மத்திய அரசின் பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார் வௌியிட்ட அறிவிப்பையொட்டி, தமிழக அரசு இந்த அறிவிப்பை செய்துள்ளது. அதில், ‘‘அனைவரிடம் இருந்தும் 31 கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
கேட்கப்படும் கேள்விகள்:
1. கட்டட எண்
2. சென்சஸ் வீட்டு எண்
3. தரை, சுற்றுச்சுவர், கூரை விவரம்.
4. எதற்காக வீடு பயன்படுத்தப்படுகிறது.
5. வீட்டின் நிலை
6. குடும்ப எண்.
7. குடும்பத்தின் மொத்த உறுப்பினர்கள்.
8. குடும்பத் தலைவரின் பெயர்
9. குடும்பத்தலைவரின் பாலினம்.
10. குடும்பத் தலைவர் எஸ்சி/எஸ்டி அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா?
11. சொந்த வீடா? வாடகை வீடா.
12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை
13. வீட்டில் திருமணமான ஜோடிகளின் எண்ணிக்கை.
14. குடிநீரின் ஆதாரம்.
15. எந்த வகையில் குடிநீர் பெறப்படுகிறது.
16. வீட்டில் மின் இணைப்பு உள்ளதா இல்லையா?
17. வீட்டில் கழிவறை உள்ளதா?
18. கழிவறையின் வகை என்ன?
19. கழிவு நீர் அகற்றும் வசதி உள்ளதா?
20. குளியல் அறை உள்ளதா?
21. சமையல் அறை மற்றும் சமையல் எரிவாயு உள்ளதா?
22. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன?
23. ரேடியா, டிரான்சிஸ்டர் உள்ளதா?
24. டிவி உள்ளதா?
25. இன்டர்நெட் வசதி இருக்கிறதா?
26. லேப்டாப்/கம்ப்யூட்டர் இருக்கிறதா?
27. தொலைபேசி/செல்போன்/ஸ்மார்ட் போன் உள்ளதா?
28. சைக்கிள்/ஸ்கூட்டர்/பைக்/மொபட் உள்ளதா?
29. கார்/ஜீப்/வேன் உள்ளதா?
30. குடும்ப உறுப்பினர்கள் அதிகம் சாப்பிடும் பருப்பு வகை என்ன?
31. செல்போன் எண். ஆகிய 31 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கான (என்பிஆர்) விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.