கோபாலப்பட்டிணத்தில் ஷாகின் பாக் போராட்டம் தொடரும் - போராட்ட குழு அறிவிப்பு



குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை கோபாலப்பட்டிணத்தில் தொடர் இருப்பு போராட்டம் எந்த காரணம் கொண்டும் ஒத்திவைக்கபடமாட்டாது என்றும் தொடர்ந்து நடைபெறும் என போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் சார்பில்  தொடர் காத்திருப்புப் போராட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் VIP நகரில் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி இன்று 16.03.2020 திங்கள்கிழமை வரை தொடர்ந்து 16-வது நாளாக நடைபெற்று வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியா & தமிழகம் முழுவதும் ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 

அதிகமான பெண்கள் உள்பட திரளானோர்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments