கோட்டைப்பட்டிணத்தில் கொரோனா வைரஸ் பற்றி நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்.! (படங்கள்)



உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன.


இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அது குறித்து மக்களிடையே அச்சத்தை போக்கும் வகையிலும் பல்வேறு இடங்களில் அரசின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கொரோனா விழிப்புணர்வு பற்றிய முகாம் நேற்று 20.03.2020 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு  நடைபெற்றது. 

இதில் அரசு ஆரம்ப சுகாதார துறை மருத்துவர்கள் மற்றும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் (BDO) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இதில் கொரோனா சம்பந்தமான பாதிப்புகள் என்ன அதை  தடுக்கும் முறைகள் தற்காத்துக்கொள்வது எப்படி என்று சொல் வடிவம் மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.

இப்படிக்கு...

முஸ்லீம் ஜமாஅத் (வக்பு),
மற்றும் தமுமுக மருத்துவர் அணி,
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம்.





கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments