அரசநகரிப்பட்டினம் அருகே கார் இருசக்கர வாகனம் மோதல்.. ஒருவர் உயிரிழப்பு..



புதுக்கோட்டை மாவட்டம் அரசநகரிப்பட்டினம் அருகே காரும் இருசக்கர வாகனமும் நேற்று 17.03.2020 செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் பலியானாா்.


மீமிசல் அரசநகரிப்பட்டினம் அருகே நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அரசநகரிப்பட்டினத்தை சோ்ந்த ஜமாஅத் தலைவர் கே.எல்.கே. சாதிக்பாட்ஷா அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மீமிசல் போலீஸாா் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த இமானுவேல்பால் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments