புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி நடவடிக்கைகளில் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவரோ, உறவினரோ செயல்பட தடை.! கலெக்டர் தகவல்.!



தேர்ந்தெடுக்கப்பட்ட  பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ உறவினர்களோ உள்ளாட்சி நடவடிக்கைகளில் செயல்பட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சிமன்ற அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பயன்படுத்தி சுந்திரமாகவும், சிறப்பாகவும் செயல்பட அரசாணை (நிலை) எண்: 60  மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படியும், அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ செயல்பட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வுக் கூட்டங்களிலோ, ஊராட்சி மன்றக் கூட்டங்கள் மற்றும் கிராமசபைக் கூட்டங்களில் தொடர்புடைய பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு பதிலாக அவரது கணவரோ, நெருங்கிய உறவினர்களோ செயல்படுவதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவையும் மீறி அப்படி யாராவது செயல்படுவதாக ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா 1800-425-9013  என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222171 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ  தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்  தலைவர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments