மீமிசல் நியூசங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாமிடம்.!



மீமிசல் நியூசங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2019-2020ம் கல்வி ஆண்டில் நடந்து முடிந்த +2 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்து அறந்தாங்கி பகுதியிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.


நேற்று வெளிவந்த 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் கதீஜா பேகம் மாணவி 600-க்கு 583 மதிபெண்கள் பெற்று புதுக்கோட்டை மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். அவரை சகமாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

அதேபோல் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களின் வெற்றிக்கு உழைத்திட்ட ஒருங்கிணைப் பாளர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் பள்ளியின் தாளாளர் சரளா, முதல்வரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான ராமசாமி, நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் ஆகியோர் பாராட்டி கௌரவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments