அன்னவாசல் அருகே கொலை வழக்கில் கைதான தம்பதி- மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!



அன்னவாசல் அருகே கொலை வழக்கில் கைதான தம்பதி- மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


அன்னவாசல் இடையர் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 43). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மருதமுத்துவுக்கும்(54) முன் விரோதம் இருந்தது. இது தொடர்பாக சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மருதமுத்து, அவருடைய மனைவி வெள்ளையம்மாள்(47), மகன் மணிகண்டன்(23) ஆகிய 3 பேரும் சேர்ந்து ரெங்கசாமியை கட்டையால் தலையில் பலமாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெங்கசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அன்னவாசல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மருதமுத்து உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து மருதமுத்து, மணிகண்டன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையிலும், வெள்ளையம்மாள் திருச்சி மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரில், மருதமுத்து உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதற்கான உத்தரவை, சிறையில் உள்ள 3 பேரிடமும் அன்னவாசல் போலீசார் வழங்கினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments