புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி புதுக்கோட்டை மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. குடும்பத்தால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 90 வயது நிரம்பிய அம்மையார் வேதம் அவர்களின் கரங்களால் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் 2வது மாடியில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது, 90 வயது நிரம்பிய வேதம் அம்மையாரை கிழ் தளத்திலிருந்து 2வது மாடி வரை தூக்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வாழ்த்தினார். கட்சி அலுவலக திறப்பு விழாவில் அக்கட்சியின் மாவட்ட கழக செயலாளர் நியாஸ் அகமது, மாவட்ட திமுக துணைச் செயலாளர் க.மதியழகன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது, மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் முல்லை முபாரக் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திறப்பு விழாவின் முடிவில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.