புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்தவர் தனவேல். இவர் மனைவி சுதாராணி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுதாராணி பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். சுதாராணியை இலுப்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.
அன்னவாசல் - புதுக்கோட்டை பிரதான சாலையில் கட்டியாவயல் என்னும் இடத்தில் ஆம்புலன்ஸ் சென்றபோது சுதாராணி பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, ஆம்புலன்ஸ் ஒட்டுநர் தேவபாஸ்கரன் இருவரும் ஆம்புலன்ஸிலேயே வைத்து சுதாராணிக்குப் பிரசவம் பார்த்தனர். பின்னர், சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர்.
இதுகுறித்து ஓட்டுநர் தேவபாஸ்கரன் கூறுகையில், ``பிரசவ சிகிச்சை மிகவும் சிக்கலானது. அதிக வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு வேறுவழியின்றி ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்க நேரிடுகிறது. தாயும் சேயும் தற்போது நலமுடன் உள்ளனர்" என்றார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.