இதுபற்றி ஹமீதுவிடம் கேட்டபோது, "தூயமரியன்னை மேல் நிலைப்பள்ளியில் தான் என் பிள்ளையும் படிக்கிது. பிள்ளைக்கு என்கிட்ட இருந்த மொபைலைக் கொடுத்திட்டேன். இந்த நேரத்துல தான், ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் இல்லைங்கிறதால, பிள்ளைகள் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு கேள்விப்படும்போது மனசுக்கு ரொம்பவே ரணமாக இருக்குது. கஷ்டப்படுகிறவங்களுக்கு எங்க நண்பர்கள் சேர்ந்து ஓயாத அலைகள் என்ற பெயரில் எங்களால முடிஞ்ச உதவிகள் செஞ்சிக்கிட்டு இருக்கோம்.
இந்த பிள்ளைகளுக்கும் பிள்ளைகளுக்கு நம்மால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்னு தான் நாங்க நெனச்சுக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்துல தான், "காயத்திரி கஷ்டப்படுகிற குடும்பம், அவளால செல்போன் வாங்க முடியலை, நீங்க கொஞ்சம் உதவ முடியுமான்னு" சொல்லி ஸ்கூல் டீச்சர்கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சு. உடனே அருண்மொழி அண்ணன்கிட்ட சொன்னேன்.
அவரும் உடனே வாங்கிக்கொடுத்துடுவோம்னு சொன்னார். சில மணி நேரங்கள்லயே நானும் கண்ணன் சாரும் வாங்கிக்கொண்டுபோய் அந்த மாணவிக்கிட்ட கொடுத்தோம். அவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். ஒரு மாணவிக்குப் படிப்புக்கு உதவியதில் எங்களுக்கும் ரொம்பவே சந்தோஷம். தொடர்ச்சியாக இதுபோன்ற கஷ்டப்படுற மாணவ, மாணவிகளுக்கு உதவணும்" என்றார்.
இதுபற்றி மாணவியின் தாய் சீதா கூறும்போது, ``3 பிள்ளைகள். கூலி வேலை செய்து தான் பிள்ளைகளைக் காப்பாற்றிக்கிட்டு வர்றேன். கொரோனாவால் வீட்டுக்காரருக்கு வேலை இல்லை. இந்த நேரத்துல சாப்பாட்டுக்கே சிரமம் தான். செல்போனை எப்படி வாங்க முடியும். எவ்வளவு சிரமம் வந்தாலும், பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியிருவோம். இப்போ செல்போன் வாங்கிக்கொடுத்தால் தான் பொண்ணு படிக்கவே முடியும்னு டீச்சர் சொன்னாங்க. செல்போன் எப்படி வாங்கிக்கொடுக்கப்போகிறோம்னு தெரியாமல் அல்லாடிக்கிட்டு கிடந்தேன். ஆனால், கடவுள் மாதிரி இந்தத் தம்பிங்க வாங்கிக்கொடுத்திட்டாங்க. அவங்க செஞ்ச உதவியை நானும், என் பெண்ணும் என்னைக்கும் மறக்கமாட்டோம்" என்றார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.