புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்களில் பலருக்கு கோரிக்கை மனுக்களை எப்படி எழுதுவது என்று தெரிவதில்லை. கலெக்டர் அலுவலகம் அருகே சிலர் திங்கட்கிழமை தோறும் அமர்ந்து பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வருகின்றனர்.
இதற்கு குறிப்பிட்ட தொகையை அவர்களிடம் வசூலிக்கின்றனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுப்பதற்கான வசதியை கலெக்டர் உமாமகேஸ்வரி ஏற்படுத்தி உள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயில் அருகே வருவாய்த்துறை ஊழியர்கள் 3 பேர் நேற்று அமர்ந்திருந்து பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்தனர். நேற்று முதல் இனி வரும் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து மனு எழுதி கொடுக்கும் பணியில் ஊழியர்கள் இருப்பார்கள். பொதுமக்கள் நேரிடையாக சென்று கோரிக்கையை தெரிவித்து மனுவாக எழுதி பெற்றுக்கொள்ளலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.