தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் இறுதியில் ரூ.37 ஆயிரம், ரூ.38 ஆயிரம், ரூ.39 ஆயிரம் என படிப்படியாக ரூ.40 ஆயிரத்தை கடந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் விலை உயர்ந்தே காணப்பட்டது. இதன் காரணமாக கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, விலை சற்று குறையத் தொடங்கியது.
கடந்த 8-ந்தேதி பவுனுக்கு ரூ.248-ம், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.160-ம் சரிந்து ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்த நிலையில், நேற்றும் தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்தது.
நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 365-க்கும், பவுன் ரூ.42 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை அதிரடியாக குறைந்து இருந்தது.
கிராமுக்கு ரூ.123-ம், பவுனுக்கு ரூ.984-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 242-க்கும், பவுனுக்கு ரூ.41 ஆயிரத்து 936-க்கும் விற்பனை ஆனது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,392 குறைந்து இருக்கிறது.
வழக்கமாக தங்கம் விலை உயரும்போதும், குறையும்போதும் வெள்ளி விலையில் மாற்றம் இருக்கும். ஆனால் கடந்த 8-ந்தேதியில் இருந்து வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.
இந்தநிலையில் நேற்று அதன் விலையும் சற்று குறைந்திருந்தது. கிராமுக்கு 60 காசும், கிலோவுக்கு ரூ.600-ம் குறைந்து, ஒரு கிராம் 82 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.82 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.