கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து சென்று கடலில் மீன்பிடித்தபோது தலையில் இரும்பு உருளை விழுந்து மீனவர் உயிரிழப்பு.!



கடலில் மீன்பிடித்தபோது தலையில் இரும்பு உருளை விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான படகில் காரைக்குடி பகுதியை சேர்ந்த கணேசன்(வயது 45) மற்றும் சபரிநாதன் (40), பழனிசாமி (42) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் சுமார் 10 நாட்டிகல் தொலைவில் கடலில் மீன்பிடித்தபோது, வலையில் உள்ள இரும்பு உருளை(கப்பி), மீனவர் கணேசன் மீது விழுந்தது. இதில் அவர் மயக்கம் அடைந்தார். இது குறித்து சக மீனவர்கள், மீனவ சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு அவருடன் கரை திரும்பினர்.

கரைக்கு வந்த பின்னர் மீனவர் கணேசனை, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சோதித்து பார்த்து, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் குழுமத்தினர் அங்கு வந்து, கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீன்பிடிக்க சென்ற மீனவர் இரும்பு உருளை தாக்கி இறந்த சம்பவம் கோட்டைப்பட்டினம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments