அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை நேர பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி, மதுரை, கட்டுமாவடி, மணமேல்குடி, மீமிசல் உள்ளிட்ட வழிதடங்களில் காலை 4 மணி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆனால் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இதனால் காலை நேரத்தில் அறந்தாங்கிக்கு சென்னை, திருப்பூர் மற்றும் பிற பகுதியில் இருந்து வரும் பயணிகள் பட்டுகோட்டை மார்கத்தில் உள்ள ஊர்களுக்கு செல்ல பஸ் இல்லாமல் தவித்து வருகின்றனர். பஸ் இல்லாததால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லமுடியவில்லை. 

எனவே அறந்தாங்கியில் இருந்து பட்டுகோட்டை மார்க்கத்தில் தற்போது 7 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை காலை 4 மணிக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments