அரியலூரில் நகைக்கடையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதன் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த போலீசார் கடை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
புதுக்கோட்டை டவுன் உட்கோட்ட போலீஸ் நிலையங்களின் எல்லை பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், அடகு கடைகள், தேசிய வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் குற்றத்தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். டவுன் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசும்போது, நகைக்கடைகளில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து இருக்க வேண்டும்.
கடையை இரவில் பூட்டிச்செல்லும்போது, கண்காணிப்பு கேமராக்களை இயங்க விடாமல் அணைக்க கூடாது. தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா நமக்கு 3-வது கண் போன்றது. திருட்டு மட்டுமல்லாமல் வேறு எந்த குற்றசம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கவும் கண்காணிப்பு கேமரா உதவுகிறது. அனைத்து நகைக்கடைகள், அடகு கடைகள், வணிக கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்தி இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன் (டவுன்), அழகம்மாள் (கணேஷ்நகர்) மற்றும் போலீசார், நகைக்கடை உரிமையாளர்கள், சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.