புதுக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மா.கார்த்திக் பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இயற்கையான முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ஊக்கத்தொகையானது தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒரு எக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையாக பெறலாம்.
மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒரு எக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகையாகவும், கத்தரி, தக்காளி, வெண்டை மற்றும் கொடிவகை காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் 1 எக்டேருக்கு ரூ.3,750 ஊக்கத்தொகையாகவும் பெறலாம். இதுதவிர இயற்கையான முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்ககச் சான்று பெறுவதற்காக தனியாகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம்.
இந்த அங்ககச்சான்று பெற ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது. மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுடைய புகைப்படம், கணினி சிட்டா, நிலவரை படம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல், இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.