அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.. மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வேண்டுகோள்.!!



அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கடலோர பகுதியில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டிடம் மற்றும் புயல் பாதுகாப்பு கட்டிடம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித்தளம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஷம்புகல்லோலிக்கர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மீன்வளத்துறை துணை இயக்குனர் சர்மிளா, உதவி இயக்குனர் குமரேசன், தாசில்தார் ஜமுனா ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments