ஆவுடையார்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் படுகாயம்...



ஆவுடையார்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே இருமாநாட்டிலிருந்து ஆவுடையார் கோவிலுக்கு ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. 

அந்த ஆட்டோ எழுநூற்றி மங்களம் கிராமத்திற்கு வந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. 

இந்த ஆட்டோவில் வந்த பெண் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனால் இருவரையும் அந்த பகுதியினர் மீட்டு அருகே உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments