SDPI கட்சியின் மீமிசல் நகர கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.!!



எஸ்டிபிஐ புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், கோபாலபட்டினம் கிளை, அவுலியா நகர் கிளை, மீமிசல் கிளை மற்றும் மீமிசல் நகர கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் 08-12-2020 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மீமிசல் நகரக் கமிட்டியின் இணைச் செயலாளர் முகமது அப்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மாவட்ட செயலாளர் ஆவுடை சதாம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட துணை தலைவர் SAM அரபாத் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.

இக்கூட்டத்தில் நடந்து முடிந்த டிசம்பர்-6 பாபரி மஸ்ஜித் போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் காலங்களில் போராட்டத்தை இன்னும் எவ்வாறு சிறப்பாக நடத்த முடியும் என்பது சம்பந்தமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
      
மேலும் கிளை கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள் மற்றும் மக்களின் பிரச்சனைகளை அறிந்து சம்பந்தப்பட்ட நிர்வாகம், துறை மூலமாக தீர்வு காண்பது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் மாநில வளர்ச்சி நிதி சம்பந்தமான ஆலோசனைகளும் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் இறுதியில் மீமிசல் கிளையின் பொருளாளர் அப்துல் பாசித் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.
 
தகவல்:
சமூக ஊடக அணி,
மீமிசல் நகர கமிட்டி,
SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments