அறந்தாங்கி அருகே அரசர்குளம், நாகுடி, ஆளப்பிறந்தான், இடையார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இந்த பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள நெற்பயிர்களில் வேரழுகல் நோய் ஏற்பட்டது மட்டுமின்றி பூச்சி தாக்குதலும் காணப்படுகிறது. இதன்காரணமாக விவசாயிகளுகள் கடும் நஷ்டம் அடைந்ததுடன், மனவேதனை அடைந்துள்ளனர். பல நாட்கள் வயலில் கிடந்து நாற்றுநடுதல், களை எடுத்தல், உரமிடுதல் என பல வேலைகள் செய்தும் பலன்கிடைக்கவில்லையே என்று வருத்தம் அடைந்துள்ளனர்.
நஷ்ட ஈடு
இது குறித்து இடையாரை சேர்ந்த விவசாயி சுப்பம்மாள் கூறும்போது, இடையார் பகுதியில் பயிரில் பூச்சி தாக்குதல் காணப்பட்டு பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் வேரழுகல் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி விவசாய பணிக்கு செலவு செய்தும் ஒன்றும் கிடைக்காததால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மக்காச்சோளம்
வடகாடு பகுதியில், மானாவாரியாக மக்காச்கோளம் பயிரிடப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால், இந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோள கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவைகள் பறவைகள், அணிகளுக்கு உணவாகின.
தற்போது, மழை விட்டநிலையில் சோளக்கதிர்களை அறுவடை செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் பாதி சோளக்கதிர்கள் கூட கிடைக்கவில்லை. அவைகள் அழுகி சேதம் அடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.