தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையொட்டி தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்த தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் தயரா கி வருகின்றனர். அதேநேரத்தில் காளைகளுக்கு உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். வாடிவாசல் பகுதியை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.
மாட்டுப்பொங்கல்
அதாவது வன்னியன்விடுதியில் உள்ள மாயன் பெருமாள் கோவிலில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். வன்னியன் விடுதி ஊர் பொதுமக்கள் மாயன் பெருமாள் கோவில் முன்பு கூட்டாக பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள். 15-ந் தேதி மாலையில் கோவில் முன் மாடுகளை கட்டிவைத்து மாட்டுப்பொங்கலிட்டு சாமிக்கு படையல் போட்ட பின் மாடுகளுக்கு ஊட்டி மகிழ்வார்கள். அடுத்த நாள் 16-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் திருச்சி, திண்டுக்கல், தஞ்சை போன்ற பிற மாவட்டங்களிலிருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து பங்கேற்க செய்வார்கள். மாவட்டத்தில் இந்த ஆண்டில் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை பார்வையிட பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் மாடுபிடி வீரர்களும் தயாராக உள்ளனர். வன்னியன் விடுதி ஊர் முக்கியஸ்தர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான டோக்கன்களை அதன் உரிமையாளர்களுக்கு நேற்று வழங்கினர். இதனை வாங்க நீண்டவரிசையில் மாட்டின் உரிமையாளர்கள் நின்றிருந்தனர்.
போலீசாரிடம் அனுமதி
மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் விழா நடத்துபவர்கள் செய்து வருகின்றனர். வருகிற 17-ந் தேதி விராலிமலையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 8 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டையொட்டி மாடுகளுக்கான கயிறுகள், மணிகள் உள்ளிட்டவை விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
மாட்டுப்பொங்கல்
அதாவது வன்னியன்விடுதியில் உள்ள மாயன் பெருமாள் கோவிலில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். வன்னியன் விடுதி ஊர் பொதுமக்கள் மாயன் பெருமாள் கோவில் முன்பு கூட்டாக பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள். 15-ந் தேதி மாலையில் கோவில் முன் மாடுகளை கட்டிவைத்து மாட்டுப்பொங்கலிட்டு சாமிக்கு படையல் போட்ட பின் மாடுகளுக்கு ஊட்டி மகிழ்வார்கள். அடுத்த நாள் 16-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் திருச்சி, திண்டுக்கல், தஞ்சை போன்ற பிற மாவட்டங்களிலிருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து பங்கேற்க செய்வார்கள். மாவட்டத்தில் இந்த ஆண்டில் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை பார்வையிட பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் மாடுபிடி வீரர்களும் தயாராக உள்ளனர். வன்னியன் விடுதி ஊர் முக்கியஸ்தர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான டோக்கன்களை அதன் உரிமையாளர்களுக்கு நேற்று வழங்கினர். இதனை வாங்க நீண்டவரிசையில் மாட்டின் உரிமையாளர்கள் நின்றிருந்தனர்.
போலீசாரிடம் அனுமதி
மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் விழா நடத்துபவர்கள் செய்து வருகின்றனர். வருகிற 17-ந் தேதி விராலிமலையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 8 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டையொட்டி மாடுகளுக்கான கயிறுகள், மணிகள் உள்ளிட்டவை விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.