வாட்ஸ்அப் செயலி சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிகளுக்கு (பிரைவசி பாலிசி) எதிராக டெல்லி ஐகோர்ட்டில் சைதன்யா ரோகில்லா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி சச்தேவா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மனோகர் லால் வாதாடினார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேட்டன் சர்மா ஆஜராகி, பிரைவசி பாசிலி விஷயத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருப்பதாக தெரிவித்தார். தரவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதி, வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், வாட்ஸ்அப் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது, விரும்பினால் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் கூறினார்.
மத்திய அரசு எழுப்பிய கேள்விக்கு வாட்ஸ்அப் பதிலளித்து வருவதை டெல்லி உயர் நீதிமன்றம் கவனித்து, அதன் பின்னர் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று கூறிய நீதிபதி, வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.