கடுமையான குளிர் மற்றும் பலத்த மழைக்கு மத்தியிலும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 40 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
எனவே இரு தரப்பினரும் 8-ந்தேதி (நாளை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் தீர்வு எட்டப்படும் என மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தலைநகரில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டம் எவ்வித தொய்வும் இன்றி வீரியமுடன் தொடர்கிறது. டெல்லியில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக பலத்த இடி, ஆலங்கட்டி பொழிதல் என டெல்லிவாசிகளுக்கு நேற்று அதிகாலை, மிகவும் மோசமான நாளாக விடிந்தது. அத்துடன் உடலை குத்தி ஊடுருவும் குளிரும் வாட்டிவருகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகவும் குளிரான ஜனவரி மாதத்தை டெல்லிவாசிகள் இந்த ஆண்டு அனுபவிக்கிறார்கள். மழையும் பெய்து வருவதால் குளிர் மேலும்அதிகரித்து வருகிறது.
இப்படி உடல் நலத்துக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருந்தபோதும், விவசாயிகளின் மன உறுதிக்கும், போராட்டத்துக்கும் எத்தகைய பின்னடைவும் ஏற்படவில்லை. அவர்கள் வழக்கம் போல தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அரசுடனான பேச்சுவார்த்தையில் எத்தகைய தீர்வும் எட்டப்படாததால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.
முன்னதாக, டெல்லியில் நேற்று நடத்துவதாக அறிவித்திருந்த மாபெரும் டிராக்டர் பேரணியை, மோசமான வானிலை காரணமாக இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாலைகள் மூடல்
இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லியில் பல்வேறு சாலைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் டெல்லிவாசிகளுக்கு மாற்று சாலைகளை போக்குவரத்து போலீசார் அறிவித்து வருகின்றனர்.
கடும் குளிரிலும், பலத்த மழைக்கு இடையேயும் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி எல்லைகளில் பெரும்பரபரப்பு நீடித்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.