வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என திட்டத்தை விரைவில் மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்று ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் என 6 நாட்கள் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே பணி செய்யும் நிலையில் உள்ளனர். இது இன்னும் நீடித்து வருகிறது.
இதனால், இந்தியாவில் இனி தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை விரைவில் மத்திய அரசு அமல்படுத்த போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா பேசியுள்ளார்.
இது குறித்து அபூர்வா சந்திரா கூறுகையில், இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ளத வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நடைமுறைதான் தொடர்கிறது. ஆனால், ஒரு நாள் ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்ய வேண்டும். அதுவே நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் வாரத்தில் 5 நாட்களும், நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்யவேண்டி இருக்கும்.
இதில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் எந்தவித நிர்பந்தமும் இல்லை. மாறி வரும் பணி தொடர்பான கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார். இருப்பினும், மத்திய அரசின் இந்த 4 நாட்கள் வேலை திட்டத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், கொரோனா காலத்தில் வேலை இல்லாமல்போனது போல் இன்னும் வேலைவாய்ப்புகள் பறிபோகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.