சிஏஏ போராட்ட வழக்கு உள்பட 10லட்சம் வழக்குகள் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு




தமிழகத்தில் சிஏஏக்கு எதிரான  போராட்டம் தொடர்பான வழக்கு உள்பட பல்வேறு போராட்ட வழங்குகள்  ரத்து செய்யப்படுவதாகவும், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



தேர்தல் சுற்றுப்பணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தென்காசியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த நிலையில், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். அப்போது,  கொரோனா காலத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக தமிழகத்தில் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் பொது முடக்கத்தின் போது, பொது மக்கள் மீதும் போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர், கொரோனா காலகட்டத்தில் இருந்து நெருக்கடியான காலகட்டத்திலும் அதிமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2,500 வழங்கியது.

5 மாதங்கள் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் மட்டும் தான் இந்த அளவுக்கு பொதுமக்களுக்கு விலையில்லாத பொருட்கள் வழங்கப்பட்டது.

நெருக்கடியான நேரத்திலும் தேர்தலை பார்க்காமல் மக்களையே பார்த்தது. 55,000 பேருக்கு பட்டா கொடுத்திருக்கிறோம் ,

மருத்துவக் காப்பீடு திட்டத்தின் தொகையை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம்.

2000 மினி கிளினிக் கொண்டு வந்து சாதனை படைத்தது தமிழக அரசு.

1100 புகார் எண்ணில் இதுவரை 60 ஆயிரம் புகார்கள் வந்த நிலையில், 1100 உதவி மையம் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று அடுக்கடுக்கான சாதனைகளை பட்டியலிட்ட முதல்வலர்

இந்த பூமி உள்ளவரை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்று ம், திமுக மு.க.ஸ்டாலின்,  6 மாசத்துல ஆட்சி கவிழும் சொன்னாரு.. ஆனா 5 வருஷமா சிறப்பா ஆட்சி செஞ்சு இருக்கோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை  (சிஏஏ) எதிர்த்து தமிழகத்தில் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும், சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.

கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்படும். சுமார்   ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

இ-பாஸ் முறைகேடு காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. சில வழக்குகள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்வது பற்றி பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments