மீமிசல் பகுதியை அடுத்த பரிவீரமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி லதா பேபி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சியிலிருந்து மீமிசல் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து மீமிசல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அந்த வாகனத்தின் டிரைவர் சங்கர் (வயது 39) என்பவரிடம் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாமுவேல் ஞானம், சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் இந்த புகையிலை பொருட்கள் மீமிசல் பகுதியை அடுத்துள்ள கோபாலபட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொண்டு செல்வதாக தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.