புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். மனுக்கள் பரிசீலனையில் 123 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்ட நிலையில், போட்டியிட விருப்பம் இல்லாமல் அதனை இன்று (திங்கட்கிழமை) திரும்ப பெறலாம். இதைத்தொடர்ந்து 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இறுதிவேட்பாளர் பட்டியல் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியிடப்படும். இதில் அந்தந்த தொகுதிகளில் எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்பது தெரிந்துவிடும்.
மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனுக்கள் ஏற்கபட்டதன் நிலவரப்படி அதிகபட்சமாக விராலிமலையில் 25 பேரும், குறைந்தபட்சமாக ஆலங்குடியில் 13 பேரும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியான பின் சுயேச்சைகளுக்கும் சின்னம் ஒதுக்கப்பட்ட பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிக்காக அந்த சீட்டினை அச்சடிக்கும் பணி தொடங்கி விடும்.
அந்தப்பணி முடிவடைந்ததும், அதனை அந்தந்த சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நடைபெறும். இவை முடிந்து மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பின் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.