அறந்தாங்கி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பாதை பிரச்சினையில் ஒரு தரப்பினர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூர் கிராமத்தில் இரண்டு தரப்பினர் வசித்து வருகின்றனர். இதில், ஒரு தரப்பினருக்கு கடந்த 1996-ம் ஆண்டு அரசு சார்பாக பட்டா வழங்கப்பட்டதாகவும், அதில் மற்றொரு தரப்பினர் செல்லும் பாதையையும் சேர்த்து பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப்பாதையை இருதரப்பினரும் பயன்படுத்தி வந்தநிலையில் ஒரு தரப்பினர் பட்டா உள்ளதாக கூறி அந்த பாதையை அடைத்துள்ளனர். இதுதொடர்பாக மற்றொரு தரப்பினர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், விரக்தி அடைந்த ஒரு தரப்பினர் அறந்தாங்கி சப்-கலெக்டர் வளாகத்தில் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், தாசில்தார் ஜமுனா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.