புதுக்கோட்டையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில், நரிக்குறவர் சமூகத்தினர் தங்களது அன்புப் பரிசுடன் கூடிய வரவேற்பால் மாவட்ட ஆட்சியரை நெகிழவைத்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், 'வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை; அதனால் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்; கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தப்பாட்டம், கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும், பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு மாதிரி இயந்திர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்து, பேருந்து நிலையத்தில் இருந்த மக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து, வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது அந்தப் பகுதியில் ஊசி, பாசி மணி விற்பனை செய்துகொண்டிருந்த நரிக்குறவர் சமூக மக்கள், மாவட்ட ஆட்சியருக்கு தாங்கள் செய்த பாசிமணிகளை ஒவ்வொருவராக வரிசையாக அணிவித்து மகிழ்ந்தனர். இதனால், ஆட்சியர் நெகிழ்ச்சியில் அந்த அன்பில் திக்குமுக்காடினார்.
பின்னர், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதில் நகராட்சிப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.