சென்னை மண்ணடியில் டிஎன்டிஜே நிர்வாகிகளை சந்தித்த தமுமுக மமக நிர்வாகிகள்






சென்னை மண்ணடியில் உள்ள  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகத்தில் 08-03-2021 திங்கட்கிழமை அன்று  அதன் தலைவர் சம்சுல் லுஹா ரஹ்மானி தலைமையில் உள்ள மாநில நிர்வாகிகளை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா தலைமையில்,மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது,தலைமை நிர்வாக உறுப்பினர் வழக்கறிஞர் PMR சம்சுதீன்,மமக துணைப் பொதுச்செயலாளர் மதுரை கவுஸ்,தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா உள்ளிட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் சந்தித்தனர்.





நிகழ்கால அரசியல் நிகழ்வுகளைப் பற்றி தமுமுக மமக நிர்வாகிகளுடன் ததஜ நிர்வாகிகள் விரிவாக கலந்துரையாடினர். தமிழ்நாட்டை சூழ்ந்திருக்க கூடிய பேராபத்தை உணரும் வகையில் அனைவரது கருத்துக்களும் இருந்தன. தமிழகத்திலே பாஜக தலைமையிலான அதிமுக கூட்டணி வீழ்த்தப் பட வேண்டும் என்ற கருத்து அனைவரிடமும் மேலோங்கி இருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments