சந்தேகத்துக்கு இடமான பணப்பரிவா்த்தனைகளை வங்கியாளா்கள் உடனே மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
தினந்தோறும் வங்கி பண பரிவர்த்தனைகளை வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும். கடந்த இரண்டு மாதங்களாக எந்தவிதமான பண பரிவர்த்தனையும் செய்யாத வங்கிக்கணக்கில் தற்போது பணப்பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.... வங்கியாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த தருணத்தில் வங்கியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும என்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள் முன்னோடி வங்கி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு முக்கிய பங்கு வங்கியாளர்கள் உள்ளது. குறிப்பாக இந்த தருணத்தில் தினந்தோறும் வங்கிகளில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக தினந்தோறும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களை கண்காணிக்க வேண்டும். மேலும் கடந்த இரண்டு மாத காலமாக எந்த விதமான பண பரிவர்த்தனையும் செய்யாத வங்கிக்கணக்கில் தற்போது பண பரிவர்த்தனைகள் நடைபெற்றால் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் உமாமகேஸ்வரி திறந்துவைத்தார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.